ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

SHARE

நமது நிருபர்

ரயில் பயணம் தொடர்பான விசாரணைகள், புகார்கள் அனைத்துக்கும் ஒரே உதவி எண்ணை இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது ரயிலில் பயணிப்பவர்கள், பயணம் குறித்த தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல்வேறு தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு பதிலாக அனைத்து குறைகளுக்கும், விசாரணைகளுக்கும் ‘139’ என்ற ஒரே எண்ணைத் தொடர்பு கொள்ளும் வசதி ரயில்வேயில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த எண்ணுக்கு அழைத்தால் இதில் உள்ள தானியங்கி சேவை மூலம் உரிய நிவாரணத்தைப் பெற இயலும். 139 என்ற எண்ணுக்கு அழைப்பவர்கள் அதன் பின்னர் பிற எண்களை அழுத்தி உரிய சேவைகளைப் பெறலாம். அந்த எண்கள்:

1 என்ற எண்ணை அழுத்தி கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பில் பேசலாம்.

2 என்ற எண்ணை அழுத்தி பி.என்.ஆர். நிலை, ரெயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, விழிப்பு அலாரம், உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவை குறித்த விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

4  என்ற எண்ணை அழுத்தி பொதுப் புகார்களைத் தெரிவிக்கலாம்

5 என்ற எண்ணை அழுத்தி லஞ்சம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.

6 என்ற எண்ணை அழுத்தி  பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

7 என்ற எண்ணை அழுத்தி ஐ.ஆர்.சி.டி.சி.யால் இயக்கப்படும் ரெயில்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

9 என்ற எண்ணை அழுத்தி ஏற்கனவே அளித்த புகாரின் நிலை குறித்து அறியலாம்.

* என்ற பொத்தானை அழுத்தி கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேசலாம்.

‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ என்ற பெயரில் இந்த எண்ணுக்கான விளம்பரங்களை ரயில்வேதுறை செய்து வருகின்றது.

#139 #ரயில்வே #உதவிஎண்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பஞ்சாப்பை வென்ற டெல்லி… பட்டியலில் முதல் இடம்!.

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

Admin

Leave a Comment