Close Menu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Home » பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’
டிரெண்டிங்

பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

இரா.மன்னர் மன்னன்By இரா.மன்னர் மன்னன்October 21, 202103 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

முந்தின நாள் இரவில் ஆரம்பித்தது பிக் பாஸ், இரவில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் என‌ மூவர் கூட்டணியினர் பேசிக்கொண்டிருந்தனர். ‘நான் ஏன் சிபிக்கு மாலை போட்டேன் என்றால், ராஜூவுக்கு என்ன மவுசு இருக்குன்னு பாக்கத்தான்’ என்று பிரியங்கா கூற, ‘அவன் சைலண்ட்டா இருந்து ஒரு கேம் ஆடுறான்’ என்று அபிஷேக்கும் கூற, ராஜு மேல் இவர்களுக்கு இருக்கும் காண்டு பச்சையாக தெரிந்தது.

“சின்ன மச்சான்.. செல்ல மச்சான்.. ஊருக்குள்ள உங்கள ஏசுறாக…” பாடலுடன் தொடங்கியது நாள். அதைப் பார்க்கும் போது ராஜூவிற்கு பிக் பாஸ் எதையோ சூசகமாக சொல்கிறாரோ? – என்றுதான் தோன்றியது. ஆனால் அந்த பாடலுக்கு ராஜூ மற்றும் தாமரையின் ஆட்டம் அருமை. பாவ்னி, ராஜூவின் கிச்சன் பிரச்சனை அடுத்த நாளும் பேசப்பட்டது. (அட இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி… யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு…) அக்ஷரா வழக்கம்போல் ராஜூவிற்கு ஆதரவாகவும் பாவ்னிக்கு எதிராகவும் பேசினார்.

இப்படியே பேசி பேசி மாலை 6 மணிக்கு இந்த வாரத்தின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கே வந்துடுச்சு. இந்த டாஸ்க் மூலம் நாமினேஷனில் இருந்து தன்னையோ அல்லது நாமினேஷனில் இருக்கும் தன்னுடைய நண்பர்களை காப்பாற்றும் வாய்ப்பும் ஹவுஸ்மேட்ஸ்க்கு கிடைத்தது. அது சரி…… விளையாட்டுன்னு ஒண்ணு விளையாடினா தானே அவங்க அவங்க யாருன்னு தெரியும். அந்த டாஸ்க்கின் பெயர் பஞ்சதந்திரம்.

அந்த போட்டியில் 5 நாணயங்கள் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்படும், அந்த நாணயத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து, நான் எடுத்து விட்டேன் என்று பிக் பாஸிடம் கேமராவில் சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த பஞ்சதந்திரம் போட்டி. நாணயம் எடுக்கும்போது யாராவது பார்த்தாகக் கூறினால், அந்த நாணயத்தை வைத்து விட வேண்டும், அது அவர்களுக்கு சேராது. ஒருவர் எத்தனை நாணயம் வேண்டுமானாலும் எடுக்கலாம். மாட்டினால் பாதாளச் சிறைக்குப் போக வேண்டும்.

இந்த டாஸ்க்கை கூட்டு முயற்சியினால் சுலபமாக தட்டித்தூக்கி விடலாம் என்பது அனைத்து ஹவுஸ்மேட்ஸ்க்கும் விளங்கியது. அவரவர்கள் நாணயங்களின் முன் மற்ற ஹவுஸ்மேட்களிடம் செய்கைகள் மூலம் நீ மறைச்சுக்கோ நான் எடுத்துக்குற, பவர் கிடைத்தால் உனக்கும் உதவுகிறேன் என்று கூறி கூட்டணி அமைக்க ஆரம்பித்தார்கள்.

இப்போதுதான் யார் யார் யாருக்கூட ஒத்துப்போகிறது என்று தெளிவாக தெரியத் தொடங்கியது. முதல் நாணயத்தை இமான் அண்ணாச்சியின் உதவியால் ஐக்கி எடுத்து பாத்ரூமில் ஒளித்து வைத்தார். இதை கவனித்த அக்ஷரா, எடுக்கும்போது ஏன் காட்டிக்கொடுக்கணும், பேசாமல் அவர் ஒளித்து வைக்கும் இடத்தில் இருந்து நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று அதிரடியாக இறங்கினார். என்ன ஒரு ராஜ தந்திரம்…

தாமரை நாணயத்தை எடுக்க முயற்சி செய்யாமல், யாராவது அதை எடுத்து எனக்கு உதவி செய்வார்களா என்று அழுதுக்கொண்டிருக்க, ‘நான் இருக்கிறேன் உனக்கு’ என்று முன்னால் வந்தார் அபிஷேக். தாமரையும் என்ன எப்படியாவது காப்பாத்திடுடா என்று தேவையில்லாமல் அவன் காலில் விழ, அபிஷேக்கும் ‘ச்ச, ச்ச அழக்கூடாது’ என்று தாமரையை தூக்கி கட்டி அணைத்து… ஆறுதல் சொல்லி… சிவாஜிக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருந்தார். முடியலடா அபிஷேக்.

யாரை வைத்து நாணயத்தை எடுத்தால் நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று அபிஷேக்குக்கு நன்றாகவே தெரியும், அழகா தாமரையையும், சின்னபொண்ணுவையும் மூளைசலவை செய்து, எனக்கு கிடைச்சா உங்கள் காப்பாத்துறேன்னு சொல்லி அலேக்காக நாணயத்தை எடுத்துக்கொண்டார்.

ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி இருந்து, மதுமிதாவும் தனக்கென்று ஒரு நாணயத்தை எடுத்து ஒளித்துவைத்துக் கொண்டார். ஆனால் பாவம், தைரியமாக எடுத்தாலும் அதை எப்படி ஒளிப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் திரு திரு என்று முழித்துக் கொண்டிருந்தார். ஆனால் மதுமிதா தனக்காக எடுக்கவில்லை ஏனென்றால் அவர் நாமினேஷனில் இல்லை, அவர் இசைக்கு உதவுவதற்காக எடுத்தார். மதுமிதா நீ ரொம்ப நல்ல பொண்ணுதான்ம்மா…

இந்த களேபரத்தில் பாவ்னி ஒரு நாணயத்தை சுட்டுவிட, பிறகு பாவ்னியும், மதுமிதாவும் கூட்டணி அமைத்து ஒன்றாக ஒளித்து, அதற்கு காவலாக அபினய்யை வைத்தனர். இதை கவனித்த நிரூப், அதை எடுக்க போய் அபினயிடம் மாட்டி ஜெயிலுக்கு சென்றார். ‘நான் ஜெயிலுக்கு… நான் ஜெயிலுக்கு போறேன்…’ன்னு ஜாலியாக கிளம்பினார். அந்த இரண்டு நாணயங்களும் மறுபடியும் வெளியில் வைக்கப்பட்டன‌. அடுத்து அபிஷேக் அவன் நாணயங்களை பிரியங்காவிடம் கொடுக்கும் போது மாட்டிக்கொள்ள, இடையில் சுருதியும் மாட்டிக்கொள்ள, மூவரும் ஜெயிலில் தஞ்சம் அடைந்தனர்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
bigg boss biggboss Biggboss season 5 biggboss tamil
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
இரா.மன்னர் மன்னன்
  • Website

Related Posts

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

July 14, 2022

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

April 2, 2022

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

February 14, 2022
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202113 Views

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

May 27, 20213 Views

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

July 8, 20222 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20212 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

By NagappanNovember 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202113 Views

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

July 8, 20222 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20212 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram Pinterest Dribbble
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.