’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

SHARE

பிரதமர் மோடி ஆட்சியில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் :

இந்தியாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளை மூட உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது.

சென்னை மறைமலை நகரிலும் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள கார் தயாரிப்புப் ஆலைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனை சரிவை நோக்கி சென்றதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இந்தப்பத்திரிக்கை செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி ‘சண்டே தாட்ஸ்’என்ற ஹேஷ்டேக்கில் . ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் 4000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என தொழிற்துறையினர் கூறியிருக்கும் செய்தி அதில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து ராகுல் தனது பதிவில் :

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு, வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி எனக் கூறியுள்ளார்.

மேலும், வேலையே இல்லாத போது அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன திங்கட்கிழமையாக இருந்தால் என்ன என்று பாஜக அரசை விமர்சித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படங்களில் நடிக்க ஆசை… திருமாவளவனின் சினிமா காதல்…

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

Leave a Comment