முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

சிங்காரவேலர்
SHARE

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளதன்படி, கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மு.வரதராசனார், ப.சுப்பராயன், இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோருக்கு சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு சிங்காரவேலரை மறந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து வாதங்கள் தொடங்கியுள்ளன.

இது குறித்து எழுத்தாளர் க.அரவிந்த்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

வங்க கவி இரவீந்திரநாத் தாகூருக்கு இராணி மேரிக் கல்லூரியில் சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தாகூருக்கு சிலை வைக்க மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சென்னை கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் இன்றைய வெலிங்டன் சீமாட்டி உயர்கல்வி மையம் தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் வீடு.

பதிவைப் பார்க்க: https://www.facebook.com/photo.php?fbid=6520989327919003&set=a.659749054043089&type=3

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D6520991654585437%26id%3D100000240022424&show_text=true&width=500" width="500" height="618" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

அந்த இடத்தில் ம.சிங்காரவேலருக்கு சிலை வைக்கவும், அந்த வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டவும் மீனவ சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தாகூருக்கு சிலை என அரசு அறிவித்துள்ளது.

கோரிக்கை வைக்காமலேயே சிலை வைக்கப்படும் நாட்டில், அந்த மண்ணின் மைந்தனுக்கு, உண்மையான புரட்சியின் நாயகனுக்கு சிலை வைக்க அரசுக்கு மனமில்லாதது ஏனோ?

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

“வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாசகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. சிங்கார வேலருக்கு சிலை வேண்டும், அவரது பங்களிப்பு மக்கள் மன்றத்தில் பேசப்பட வேண்டும்.”

இதனையொட்டி, கவனக்குறைவு என்றால் சரி செய்யப்பட வேண்டும் என்றும் கவனிக்கவே இல்லை என்றால் அரசு வருத்தம் உணர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் பேச்சால் அதிர்ச்சி

Admin

எனக்கு எதுவும் தெரியாது சார்….. காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

Lok Sabha 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்…  யார் இந்த ட்ரெண்டிங் வேட்பாளர் திண்டுக்கல்  முபாரக்?

Pamban Mu Prasanth

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

Admin

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

ஹைட்ரோ கார்பனுக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிகளை வழங்காது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

Leave a Comment