ஆப்கானில் போராளி குழுக்களுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலி

SHARE

தாலிப்ன்கள் பஞ்ச்ஷீர் போராளிகளுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைகளுக்கும் தலிபான் அமைப்புகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது.

இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் இருந்து வந்த நிலையில் அமெரிக்க அதிபராகபதவியேற்ற ஜோ பைடன்அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுவதாகஅறிவித்தார். அதைத்தொடர்ந்து அமெரிக்க படைகள் படிப்படியாக ஆப்கானை விட்டு வெளியேறினர்

இதனால் , ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றினர். உடனடியாக அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து ஆப்கனின் இடைக்கால அதிபராக துணை அதிபர் அமருல்லா சாலே தன்னைத் தானே அதிபராக அறிவித்துக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது.

அந்த பகுதியை கைப்பற்றும் முயற்சியில் தலிபான் படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களை எதிர்த்து பஞ்ச்ஷீர் போராளிகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தலிபான்களுடன் நடைபெற்ற சண்டையில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

அரசியலில் ஈடுபட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? – விழுந்து விழுந்து சிரித்த தலிபான்கள்

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

3-வது திருமணத்துக்கு தயாரான பிரபல பாடகி..!!

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

Leave a Comment