தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

SHARE

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 5,134 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது.

மீதமுள்ள 1,472 கி.மீ. சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் ஆண்டுதோறும் 8 முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் 24 சுங்கச்சாவடிகளில் இந்தாண்டுக்கான கட்டணம் நேற்று (செப்டம்பர் 1) முதல் உயர்த்தப்பட்டது. இது வாகன ஓட்டிகள், சரக்கு லாரி உரிமையாளர்கள் என பலரையும் அதிருப்திகுள்ளாக்கியது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இதற்கு பதலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறினார்.

மேலும் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெமிலி ,சென்னசமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், இதனை நீக்க மத்திய அமைச்சரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை – தமிழக அரசு எதிர்ப்பு

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Admin

Leave a Comment