ஒன்றிய அரசு என அழைக்கத் தடையில்லை.!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

SHARE

மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அனைவரும், ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைத்து வருகின்றனர். இதற்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என கூறுவதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம், இந்தியா மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருப்பதால் தான் அதை பயன்படுத்துவதாகவும், இனியும் அதை தான் பயன்படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்க பதிலளித்தார்.

இந்நிலையில் ஒன்றியம் வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க கோரி, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடையில்லை எனவும் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் இப்படி தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

மேலும், ஒன்றியம் வார்த்தைக்கு தடை கோரிய ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

Leave a Comment