கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!.

SHARE

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடியில் சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தற்போது 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வின் போது கீழடியில், நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள், கல் உழவு கருவி, கத்தி போன்ற ஆயுதம், எடைக் கற்கள், 13 தமிழ் எழுத்துகள் அடங்கிய பானை ஓடுகள், சங்கு வளையல்கள், குழந்தைகள் விளையாடும் செப்புப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றை பார்வையிட்ட அமைச்சர்களிடம், பொருட்கள் குறித்து தொல்லியல் துறை இயக்குனர்கள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு ,
சர்வதேச தரத்தில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கூறினார். மேலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக சமூதாயம் கீழடியில் வாழ்ந்துள்ளதாக கார்பன் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.

கீழடியில் கிடைத்த பொருட்களுக்கான அருங்காட்சியம் கீழடியிலேயே அமைய வேண்டும் என்பது தமிழக மக்களின் நெடுங்கால கோரிக்கைகளில் ஒன்று. அது தொடர்பாக தமிழக தொல்லியல் அமைச்சர் உறுதி அளித்துள்ளது வரலாற்று ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

Leave a Comment