பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

SHARE

சென்னை:

நமது நிருபர்.

9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை விடும் திட்டம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

கொரோனா தாக்கத்தால் சுமார் 10 மாதங்களாக முடங்கி இருந்த தமிழகத்தின் பள்ளிக் கூடங்கள் இந்த ஜனவரியில்தான் திறக்கப்பட்டன. தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களில் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட ஆலோசனைகளில் மக்கள் முகக் கவசங்களைக் கட்டாயம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலால் 12ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து விடலாம் என்று ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மறுபக்கம் விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் பரவியும் வந்தன.

இது குறித்து இன்று விளக்கமளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், இது தொடர்பான வதந்திகளை மாணவர்களும் பெற்றோரும் நம்ப வேண்டாம் என்றும் கூறினர்.

அத்தோடு, இப்போது மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள் அவசியமானவை என்பதால் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

Admin

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

Leave a Comment