பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

SHARE

சென்னை:

நமது நிருபர்.

9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை விடும் திட்டம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

கொரோனா தாக்கத்தால் சுமார் 10 மாதங்களாக முடங்கி இருந்த தமிழகத்தின் பள்ளிக் கூடங்கள் இந்த ஜனவரியில்தான் திறக்கப்பட்டன. தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களில் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட ஆலோசனைகளில் மக்கள் முகக் கவசங்களைக் கட்டாயம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலால் 12ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து விடலாம் என்று ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மறுபக்கம் விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் பரவியும் வந்தன.

இது குறித்து இன்று விளக்கமளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், இது தொடர்பான வதந்திகளை மாணவர்களும் பெற்றோரும் நம்ப வேண்டாம் என்றும் கூறினர்.

அத்தோடு, இப்போது மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள் அவசியமானவை என்பதால் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

எனக்கு எதுவும் தெரியாது சார்….. காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

Admin

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுங்கள்- தமிழக அரசு

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

Leave a Comment