சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே வந்துள்ளார். அலுவலகத்திற்குள் வந்ததும் தனது guitar bagஇல் மறைந்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து அலுவலகத்தில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார்.
மேலும், அங்கிருந்த அலுவலக கண்ணாடி, கணினி, டேபிள் உள்ளிட்டவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடித்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அந்த நபரை வீடியோ எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஆபாச சொற்களால் அவர்களைத் திடியுள்ளார்


மேலும், . நாளைக்கு இது எல்லாம் முக்கிய செய்திகள்ல வரனும்” என்றும் அவர் ஆவேசமாகக் கத்துகிறார். இந்த வீடியோக்களும் ட்விட்டரில் தற்போது வைரலாகியுள்ளது.
இதையடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் ஊடக நிறுவனம் மீதே இதுபோன்ற வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
free fire download for pc Ativador Windows 10 Download Snaptube APK