1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

SHARE

ஒரு லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டும், இந்தியாவின் எதிர்கால தேவைக்காகவும் மருத்துவம் பயிலாதவர்களை மருத்துவத்துறையில் பயிற்சி அளித்து, கொரோனா முன்களப்பணியாளர்களாக ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கென பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 26 மாநிலங்களில் சுமார் 111 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 6 பிரிவுகளின் கீழ் பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதாவது மருத்துவ சேவை, அடிப்படை மருத்துவ சேவை, மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, அவசர கால மருத்துவ சேவை, மாதிரி சேகரிப்புக்கு உதவுவது, மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெற விரும்புவோருக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் இன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சுமார் ஒரு லட்சம் முன்களப்பணியாளர்களை உருவாக்கும் முயற்சியில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த பேரிடர் காலத்தில் சுயநலமின்றி செயலாற்றி வரும் சுகாதாரத்துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

பிப்.14-ல் பசு அணைப்பு தினத்தை கைவிட்ட அரசு – காரணம் என்ன ?

Nagappan

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

Leave a Comment