வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

SHARE

நமது நிருபர்

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது எழுந்த நிறவெறிக் குற்றச்சாட்டுக்கு இங்கிலாந்து ராணி விளக்கம் அளித்து உள்ளார்.

ஹாலிவுட் நடிகையான மேகன் மார்கல் சில ஆண்டுகள் முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியை காதல் திருமணம் செய்து கொண்டார். மார்கல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தவர் என்பதோடு அவர் ஆப்ரிக்க வம்சாவழித் தொடர்பும் உடையவர் என்பதால் இந்தத் திருமணத்தை ஏற்பதில் பிரிட்டன் அரச குடும்பம் தயக்கம் காட்டுவதாக அப்போதே தகவல்கள் கசிந்தன.

பின்னர் சில ஆண்டுகள் முன்பு இந்தத் தம்பதிகள் பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். இதனை பிரிட்டன் அரச குடும்பமும் ஏற்றது. ஆனால் எந்த காரணத்திற்காக இவர்கள் வெளியேறினார்கள் என்பதில் பல்வேறு யூகங்களே வெளியாகின. மேகன் – ஹாரி தம்பதிகள் நேரடியான பதில் எதையும் கூறவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் உலகின் நம்பர் 1 தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியான ஓபரா வின்பரேவின் நிகழ்ச்சிக்கு வந்த மேகன் மார்கல்,

”நான் கருத்தரித்து இருந்த காலங்களில், பிறக்கவுள்ள என் மகன் எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். ‘அவனுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படாது, அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படாது’ என்றெல்லாம் பேசப்பட்டன. அப்போது நான் இனி உயிர் வாழவே கூடாது என்று கூட நினைத்தேன்” – என்று கூறினார்.

இந்த பேட்டி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இங்கிலாந்து அரச குடும்பத்தை விமர்சித்தனர். மேகனின் தந்தையே ‘அரச குடும்பத்தினர் அப்படி எண்ணி இருக்க மாட்டார்கள்’ என்று அரச குடும்பத்துக்கு ஆதரவாகப் பேட்டி கொடுத்ததும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இது குறித்து இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,

’அரச குடும்பத்தின் மீதான புகார்களின் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், பொது வெளியில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். குடுபத்திற்குள் தவறுகள் சரிசெய்யப்படும். மேகன், ஹாரி, ஆர்ச்சி அகியோர் எப்போதும் இங்கிலாந்து அரச குடும்பத்துக்குப் பிரியமானவர்களாக இருப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இதென்ன சானிடைசரா? … சுட்டிக்குழந்தையின் வீடியோ வைரல்…

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

மீண்டும் கொரோனா..தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Admin

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது!: நடுக்கத்தில் தென்னாப்பிரிக்கா!.

டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….

Admin

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

Leave a Comment