திருமணமான பெண்ணை நபர் ஒருவர், ஓடும் ரயிலில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகாரின் சுல்த்கஞ்சில் உள்ள பீர் குர்த் கிராமத்தில் வசிபவர்கள் ஆஷ்குமார் மற்றும் அனு குமாரி.
இவர்கள் இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு குடும்பத்தார் வலுகட்டாயமாக திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
இருப்பினும், அவர் பல ஆண்டுகளாக ஆஷ்குமாரை காதலித்து வந்ததால், நடந்து முடிந்த திருமணத்தின் மீது நாட்டம் கொள்ளாது இருந்துள்ளார்.
இந்த நிலையில் ஓடும் ரயிலில் ஆஷ்குமார் தனது காதலியும் வேறு ஒருவரின் மனைவியுமான அனு குமாரியை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது