Close Menu
Mei EzhuththuMei Ezhuththu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Facebook X (Twitter) Instagram
Home » இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.
தமிழ்நாடு

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

இரா.மன்னர் மன்னன்By இரா.மன்னர் மன்னன்May 11, 2021Updated:May 11, 202103 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று உள்ள இறையன்பு அவர்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, ”நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது” – என்று கடிதம் எழுதி உள்ளார். அத்தோடு, ”அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம்” – என்று அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். இறையன்பு அவர்களின் இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது.

ஆனால் உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இறையன்பு அவர்கள் எழுதிய மிகப் பெரும்பாலான நூல்கள் பள்ளி மாணவர்களும், மக்களும், அரசு அதிகாரிகளும் கட்டாயம் படிக்க வேண்டியவை. மிகத் தரமானவை.

தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும், பாடங்களை எப்படி உள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பது குறித்து இவர் எழுதிய ‘படிப்பது பாரம்’  நூலும், ஆட்சிப்பணித் தேர்வுக்கு ஏழை எளிய மாணவர்கள் கூட எப்படி எளிதான முறையில் தயாராகலாம் என்பதை விளக்கும் இவரது ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ நூலும், புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஐ.ஏ.எஸ். தேர்வை மாணவர்கள் எப்படி அணுகுவது என்பதை விளக்கும் ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’ நூலும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை.

போர் உத்திகளில் இருந்து வெற்றிகளுக்கான சூத்திரங்களை எடுத்து விளக்கிய ‘போர்த் தொழில் பழகு’ நூலும், முதன்மையான இடங்களை எப்படி அடைவது தக்க வைப்பது என்பதை விளக்கும் ‘சிம்மாசன சீக்ரெட்’ நூலும், மனிதர்கள் தங்களைத் தாங்களே அறிய ‘ஏழாவது அறிவு’ மற்றும் ‘உன்னை அறிந்தால்’ ஆகிய நூல்களும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நிச்சயம் உதவக் கூடியவை.

தற்கொலை தடுப்பு வழிகாட்டி நூலாக இவர் எழுதிய ‘உச்சியில் இருந்து தொடங்கு’ நூலும், தனது நினைவுப் பெட்டகத்தில் இருந்து இவர் எழுதிய ‘காற்றில் கரையாத நினைவுகள் நூலும்’, மனித மூளையை விளக்கும் ’மூளைக்குள் சுற்றுலா’ நூலும் இவரது பரந்த எண்ணத்தையும், சிந்தனைத் திறனையும் பறைசாற்றக் கூடியவை. 

இவரது ‘கேள்வியும் நானே! பதிலும் நானே!!’ – என்றபுத்தகம் மிகவும் வித்தியாசமானது. இந்நூலில் தானே கேட்ட கேள்விகளுக்கு இறையன்பு அவர்கள் அட்டகாசமான பதில்களைக் கொடுத்து உள்ளார். உதாரணமாக சில கேள்வி பதில்கள் கீழே!.

கே: நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?

ப: மௌனத்தை…

கே: அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?

ப: அறத்துக்கும் அன்பே ஆதாரம்!

கே:  சோம்பலின் உச்சம் எது?

ப: கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.

கே: துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?

ப: பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!

கே: திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?

ப: கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.

கே: பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?

ப: பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.

கே: எந்தப் பஞ்சம் கொடியது?

ப: இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.

இவர் எழுதிய நூல்களில் எண்ணிக்கை சுமார் 102. அவற்றின் மொத்தப் பட்டியல் கீழே இணைக்கப்பட்டு உள்ளது. கல்வித் துறையினரும் அரசு அதிகாரிகளும் தனது நூல்களை வாங்க வேண்டாம் என்று சொன்ன இறையன்பு அவர்கள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் அவ்வாறு சொல்லவில்லை. எனவே அறிவு வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த நூல்களை வாங்குங்கள்.

  1. இலக்கியத்தில் மேலாண்மை
  2. ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
  3. படிப்பது சுகமே
  4. சிற்பங்களைச் சிதைக்கலாமா
  5. பணிப் பண்பாடு
  6. ஆத்தங்கரை ஓரம்
  7. சாகாவரம்
  8. வாய்க்கால் மீன்கள்
  9. நரிப்பல்
  10. சிம்மாசன சீக்ரட்
  11. துரோகச் சுவடுகள்
  12. ஏழாவது அறிவு பாகம்-1
  13. ஏழாவது அறிவு பாகம்-2
  14. ஏழாவது அறிவு பாகம்-3
  15. அரிதாரம்
  16. ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
  17. பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
  18. அழகோ அழகு
  19. சின்னச் சின்ன வெளிச்சங்கள்
  20. உள்ளொளிப் பயணம்
  21. ஓடும் நதியின் ஓசை பாகம்-1
  22. ஓடும் நதியின் ஓசை பாகம்-2
  23. மென்காற்றில் விளை சுகமே
  24. முகத்தில் தெளித்த சாரல்
  25. முடிவு எடுத்தல்
  26. நேரம்
  27. காகிதம்
  28. வனநாயகம்
  29. வரலாறு உணர்த்தும் அறம்
  30. ஆர்வம்
  31. ஆணவம்
  32. மருந்து
  33. மழை
  34. திருவிழாக்கள்
  35. இணையற்ற இந்திய இளைஞர்களே
  36. ரயில் பயணம்
  37. விவாதம்
  38. பொறுமை
  39. எது ஆன்மிகம்
  40. வைகை மீன்கள்
  41. பூனாத்தி
  42. வேடிக்கை மனிதர்கள்
  43. முதல் தலைமுறை
  44. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
  45. வாழ்க்கையே ஒரு வழிபாடு
  46. சறுக்கு மரம்
  47. உழைப்பால் உயர்வோம்
  48. சின்னச் சின்ன மின்னல்கள்
  49. திருப்பாவைத் திறன்
  50. திருவெம்பாவை
  51. அன்புள்ள மாணவனே
  52. உச்சியிலிருந்து தொடங்கு
  53. தர்மம்
  54. இயற்கை
  55. மலர்கள்
  56. முதிர்ச்சி
  57. நட்பு
  58. தரிசனம்
  59. சந்தித்ததும் சிந்தித்ததும்
  60. சுய மரியாதை
  61. இல்லறம் இனிக்க
  62. எது சரியான கல்வி
  63. அச்சம் தவிர்
  64. அவ்வுலகம்
  65. நின்னிலும் நல்லன்
  66. போர்த்தொழில் பழகு
  67. பத்தாயிரம் மைல் பயணம்
  68. வையத் தலைமைகொள்
  69. சிதறு தேங்காய்
  70. வியர்வைக்கு வெகுமதி
  71. மேலே உயரே உச்சியிலே
  72. மனிதன் மாறிவிட்டான்
  73. உன்னோடு ஒரு நிமிஷம்
  74. எப்போதும் இன்புற்றிருக்க
  75. உலகை உலுக்கிய வாசகங்கள்
  76. கேள்வியும் நானே பதிலும் நானே
  77. செய்தி தரும் சேதி
  78. கல்லூரி வாழ்க்கை
  79. நினைவுகள்
  80. பிரிவு
  81. சேமிப்பு
  82. சிக்கனம்
  83. சுத்தம்
  84. தாமதம்
  85. தவம்
  86. தூக்கம்
  87. உடல்
  88. காதல்
  89. கருணை
  90. தனிமை
  91. வாழ்க்கை
  92. வைராக்கியம்
  93. அழகு
  94. நம்பிக்கை
  95. மூளைக்குள் சுற்றுலா
  96. காற்றில் கரையாத நினைவுகள்
  97. நமது அடையாளங்களும் பெருமைகளும்
  98. Ancient Yet Modern – Management Concepts in Thirukkural
  99. Comparing Titans – Thiruvalluvar and Shakespeare
  100. Random Thoughts
  101. Effective Communication : The Kambar Way
  102. Steps to Super Student
  • பிரியா வேலு

SHARE
இறையன்பு இறையன்பு ஐஏஎஸ் இறையன்பு நூல்கள் நூல்கள் வெ.இறையன்பு
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
இரா.மன்னர் மன்னன்
  • Website

Related Posts

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

200 நாட்களாகப் போராடும் மக்கள்… கண்டுகொள்ளாத அரசு… பரந்தூரில் நடப்பது என்ன?

February 12, 2023

பிறந்த குழந்தை “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியது உண்மையா? – மருத்துவர்கள் விளக்கம்

February 9, 2023
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202119 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20219 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20215 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

July 16, 20214 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202119 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20219 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20215 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Threads
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.