Author: Admin

ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாறுஆகிய 5 மொழிகளில் சினிமா படமாக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த சரவண பவன் ராஜகோபால் , ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியதும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் சம்பவங்களை வைத்து இந்தப் படம் தயாராக உள்ளது. இதில் ஜீவஜோதியாக நடிக்கும் நடிகை, ராஜகோபாலாக நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது, “எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களைத் தாண்டி, உணர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான எனது போராட்டத்தை, , ஜங்கிலி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது மனதிற்கு நெகிழ்வைத் தருகிறது. எனது கதையில் ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Read More

மீனவர்கள் தன்னை தூக்கிச் சென்றது ஏன் என்பது பற்றி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் படகில் இருந்து கீழே இறங்கிய போது அவரை மீனவர் ஒருவர் தூக்கிக் கொண்டு வந்து கால் தண்ணீரில் படாமல் கரையில் இறக்கினார் அவரது செருப்பு தண்ணீரில் படக்கூடாது என்பதற்காக அமைச்சரை மீனவர் ஒருவர் தூக்கிக் கொண்டு செல்லுமாறு கூறியதாக வீடியோ வைரலானது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த அனிதா ராதாகிருஷ்ணன் நான் யாரையும் தூக்கி கொண்டு செல்ல சொல்லவில்லை அவர்கள் அன்பு மிகுதியால் (மீனவர்கள்) என்னை தூக்கிக் கொண்டு சென்றார்கள் . இத்தனை ஆண்டுகளில் பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர் நீங்கள் ஒருவர்தான் என எ மீனவர்கள் பாராட்டியதாக கூறினார்.

Read More

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டநிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார்.

Read More

மக்கள் நீதிமய்யம் கட்சி முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன். கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவருடன் நெருக்கமாகவும், முக்கியப் பொறுப்பிலும் இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட்டு, 36 ஆயிரத்து 855 ஓட்டுகள் பெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த பின், கமலுக்கும், மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து , மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார். இந்த நிலையில் மகேந்திரன் தி.மு.க.,வில் இணைவதாக தகவல் வெளியான நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மகேந்திரன் திமுகவில் இணைந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது . கொங்கு மண்டலத்தில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறாதது வருத்தமளிக்கிறது. லேட்டானாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் கிடைத்துள்ளார்.…

Read More

கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கங்கை நதியில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி நதியில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையோரங்களில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் நீரில் மிதக்க தொடங்கின. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.இந்த சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறியது. இதனையடுத்து கங்கை நீதி கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தேசிய கங்கை தூய்மை திட்ட இயக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கங்கை நதியின் மாதிரியை சேகரித்து ஆய்வு நடத்தியது. இதில் கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலின்டா, உலகின் மிகப்பெரியஅறக்கட்டளையான கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பில் இருந்து, 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பில் கேட்ஸும், அவரது மனைவி மெலின்டா கேட்ஸும் அண்மையில் விவகாரத்து செய்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நிர்வகித்து வந்த கேட்ஸ் அறக்கட்டளையில் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே இவர்களின் விவகாரத்து முடிவால், கேட்ஸ் அறக்கட்டளை செயல்பாடுகளை நிர்வகிப்பதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும், தொடர்ந்து பொறுப்பில் நீட்டிப்போம் என்றும் இருவரும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பில் நீட்டிக்க முடியாது என முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து, தற்போது அறக்கட்டளையின் இணை தலைவராகவும் அறங்காவலராகவும் உள்ள மெலின்டா, தனது பொறுப்புகளில் இருந்து விலகுவார் என கேட்ஸ் அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர், கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை, பில் கேட்ஸ் முழுமையாக ஏற்கக்கூடும் எனவும் தகவல்…

Read More

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டப்படுவதற்கான முயற்சியை தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் அறிவித்தது அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் கர்நாடகா எடுக்ககூடாது என்றும், கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் மேகதாதுவில் அணைகட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக மக்களையும், விவசாய மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்றும், தமிழகம்…

Read More

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. கொரோனவால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 13ம் தேதி மேக்ஸ் மருத்துவமனையில் வீரபத்ர சிங் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார். சில நாட்களுக்கு பின்பு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் வீரபத்ர சிங் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாகவும், 6 முறை முதல்வராகவும் இருந்தவர் வீரபத்ர சிங். இந்த நிலையில் வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீரபத்ர சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

கே.ஜி.எஃப். 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். 1. இந்த படம் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். 2 படம் தயாரிக்கப்பட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் கே.ஜி.எஃப். 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Read More

புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. .மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 43 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இன்று பதவியேற்றவர்களில், 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யார் யாருக்கு என்ன பதவி: மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகியுள்ளார் தமிழக பாஜகவின் எல்.முருகன். தர்மேந்திர பிரதான்: கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஹர்தீப் சிங் புரி: பெட்ரோலியம் ஊரக வளர்ச்சி வீட்டு வசதித் துறை பியூஷ் கோயல்: ஜவுளித் துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை ஸ்மிருதி இராணி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் தூய்மை இந்தியா திட்டம் மன்சுக் மாண்டவியா: சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனத் துறை…

Read More