ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

SHARE

ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கபட்டதாக இருந்த இந்து மகா சபாக்கள். விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவர் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் மீது புகார் அளித்திருந்தார்.

அவர் புகார் மனுவில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடவும் ஸ்ரீகண்டனுக்கு ரூபாய் 14 லட்சம் கொடுத்ததாகவும்

ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் ஸ்ரீகண்டன் மிரட்டலில் ஈடுபட்டதாக தனது புகாரில்கூறியிருந்தார்

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகண்டன் தாக்கல் செய்த மனுவானது நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக காவல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகண்டன் மீது ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீகண்டன் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் ஒரு காலத்தில் இந்து மகாசபா என்பது திருவாசகம் தேவாரம் பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கப்பட்டு இருந்ததாகவும் தற்போது இந்து மகாசபா விநாயகருக்கு பணம் வசூல் செய்வதற்காகவே உள்ளதாக வேதனை தெரிவித்தார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… 4 மாவட்டங்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை அனுமதி

Admin

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

Leave a Comment