ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

SHARE

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் வெள்ளிகிழமைகளில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூ விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜயா, அலுவலக வாளாகத்தில் அவர் கொண்டு வந்திருந்த சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனயாக அவரை தடுத்தனர். அப்போது ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில்களை திறக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய அவர், ஆடி மாத உற்சவம் நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை பூட்டினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், ஆத்தாவுக்கே இந்த நிலையா என ஆதங்கப்பட்டு கூச்சலிட்டார்.

இதனையடுத்து விஜயாவை சமரசப்படுத்திய போலீசார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றி விசாரணைக்காக பந்தய சாலை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

Admin

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

10 நிமிடம் தான் டைம்.. வங்கி மெசேஜ் குறித்து காவல்துறை எச்சரிக்கை

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

Leave a Comment