ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

SHARE

அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாள்.  ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாட்கள்தான். அதில் ஆடி அமாவாசை முன்னோர்களைக் கொண்டாடக்கூடிய நாள். இந்த வருடம், வரும் 08.08.2021 அன்று ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. சரியாக 07.08.2021 இரவு 7.39 மணிக்குத் தொடங்கி 08.08.2021 இரவு 7.56 மணி வரைக்கும் அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. 

ஏன் ஆடி அமாவாசையன்று வழிபட வேண்டும்?:

பொதுவாக வரும் அமாவாசைகளில், நம் முன்னோர்களை வழிபடுவது இருந்தாலும், ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில் நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

அமாவாசையில் முக்கியமான மூன்று அமாவாசைகள் உள்ளன. அவை:

1.ஆடி அமாவாசை

2.புரட்டாசி அமாவாசை

3.தை அமாவாசை

ஆடி அமாவாசை மேலோகத்தில் இருந்து நம்மை காண பூலோகத்திற்கு முன்னோர்கள் வருவதாக நம்பப்படும் நாள். இந்த நாளில் அவர்களை தர்ப்பணம் கொடுத்து வரவேற்பதே ஆடி அமாவாசையின் சிறப்பு.

புரட்டாசி அமாவாசை அல்லது மஹாளய அமாவாசையில் முன்னோர்கள் அனைவரும் ஒன்று கூடுவர் என்பது நம்பிக்கை, இதுவே புரட்டாசி அமாவாசையின் சிறப்பு.

தை அமாவாசையில் நம் முன்னோர்கள் திரும்ப விண்ணுலகிற்குச் செல்கின்றனர். அன்று அவர்களை மனதார வழிபட்டு மகிழ்ச்சியுடன் அனுப்பிவைக்க வேண்டும். 

ஆடி அமாவாசை வழிபாட்டால் ஏற்படும் பலன்கள்:

இந்த நன்னாளில் நம் முன்னோர்களை வழிபடுவதால், அவர்களது மனம் குளிர்ந்து, மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நாளில் அவர்களை வழிபட்டு நாம் இறைவனிடம் என்ன வேண்டினாலும் அது சுபமாக முடியும் என்பதுதான் இந்த நாளின் சிறப்பு. நாம் முன்னோர்களை மகிழ்வித்ததால், அவர்கள் நமக்காக இறைவனிடத்தில் நமக்கு வேண்டிய அனைத்தும் கொடுக்க அருள் புரிய செய்வார் என்பது நம்பிக்கை.  

ஆடி  அமாவாசையில் கொடுக்ககூடிய பொதுவான தர்ப்பணம்தான் காருண்ய தர்ப்பணம். இது ஒரு நபர் இறந்த எந்த ஒரு உயிரினங்களுக்காகவும் கொடுக்கக்கூடியது. 

தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள்:

ஒரு ஆண், இறந்து போன தன்னுடைய தாய், தந்தை, மகன், மனைவி, தாத்தா, பாட்டி போன்ற அனைத்து உறவுகளுக்காகவும் கொடுக்கலாம்.

ஒரு பெண், தன்னுடைய இறந்த கணவருக்கு கொடுக்கலாம். இது தவிர சுமங்கலி பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. பொதுவாக பெண்கள் முன்னோர்களை வழிபட்டு தீப ஆராதனை மற்றும் படையல் படைத்து, அந்த படையலை சாப்பிட்டால் போதுமானதாகும்.   

எப்படி தர்ப்பணம் செய்வது?:

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்கக்கூடியவர்கள், அன்று விரதமிருந்து, எள்ளும் தண்ணியும் இறைத்து, அதாவது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவில் விட வேண்டும், தங்களுக்கு தெரிந்த இறந்தவர்களின் பெயர்களை கூறி சூரியனை வணங்க வேண்டும். அதுவே போதுமானது. 


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

Leave a Comment