முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

SHARE

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வந்தார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்புரையாற்றினார். குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 16-வது தலைவராக கருணாநிதியின் படம் இடம்பெறுகிறது. முதலமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைக்கு நேர் எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கீழ் “காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாஜக சார்பில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழாவில் கலந்து கொண்டார். கீ.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே.வாசன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

Leave a Comment