இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

SHARE

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொழும்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 50 ரன்களும் விளாச 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.

இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா 44 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 18.3 ஓவர்களில் இலங்கை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

அந்த மனசுதான் சார் தங்கம் .. குழந்தைக்கு அவசர சிகிச்சை; பதக்கத்தை ஏலமிட்ட ஒலிம்பிக் வீராங்கனை

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிரடி…வில்வித்தையில் இந்தியா அசத்தல் வெற்றி

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

மீண்டு எழுந்த சென்னை… முதல் இடத்தைக் கைப்பற்றியது!.

இரா.மன்னர் மன்னன்

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

Leave a Comment