மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…

SHARE

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 1லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது

இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இன்று சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, முன்பு 825 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், தற்போது 850 ரூபாய் 50 காசுகளாக விலை உயர்ந்துள்ளது.

இதைப்போல வணிக ரீதியான எரிவாயு சிலிண்டரின் விலையும் 84 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஆயிரத்து 687 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் இந்த புதிய விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டதைப் போல சிலிண்டர் விலை 1000 ரூபாயைத் தொடுமோ? – என்ற கேள்வி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

பீட்சா டோர் டெலிவரி செய்யும் போது ரேசன் பொருட்கள் செய்ய முடியாதா? .. கேள்வி எழுப்பும் டெல்லி முதல்வர்

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

டெல்டா கொரோனா வேகமாக பரவ வாய்ப்பில்லை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

Leave a Comment