நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

SHARE

யூடியூப் சேனல் மூலமாகஆபாசமாக பேசிய மதன் போலீசாரல் நேற்று கைது செய்யப்பட்டர்.அப்போது செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்த போது நான் என்ன பிரதமரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களிடம் ஆபாசமாக பேசி பணமோசடியில் ஈடுபட்ட யூ-டியூபர் மதன் மீது புகார் எழுந்ததால் போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மதன் தருமபுரியில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்ததார். இதனை கண்டறிந்த தனிப்படை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

யூ-டியூபர் மதனிடமிருந்து 2 சொகுசு கார்கள், 3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.

இதனைத் தொடர்ந்து, மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.

அப்போது,செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்தபோது,நான் என்ன பிரதமரா?”,என்று மதன் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த போலீசார், “நீ ஒரு குற்றவாளி”,என்று கூறி விசாரணைக்காக காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

பின்னர், அங்கு மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மதனை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், பின்பு காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

Admin

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுங்கள்- தமிழக அரசு

Admin

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

Leave a Comment