மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

SHARE

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நடந்து வருகிறது.

மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.

இந்த நிலையில் கோபன்ஹேகனில் நேற்று நடந்த ஆட்டத்தின் போது டென்மார்க் மர்றும் பின்லாந்து அணிகள் விளையாடின.

முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார்.

இதனால் கால் பந்து போட்டி நிறுத்தப்பட்டு. மருத்துவக் குழுவினர் மைதானத்திற்கு வந்து எரிக்சனுக்கு சிகிச்சை அளித்தனர் , ஆனால் அவருக்கு நினைவு திரும்பவில்லை.

இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீராக அவரது ரசிகர்களும் சக வீரர்களும் பிரார்த்தனை செய்தனர்.

தற்போது கிறிஸ்டியன் எரிக்சன் சுய நினைவோடு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

மீண்டு எழுந்த சென்னை… முதல் இடத்தைக் கைப்பற்றியது!.

இரா.மன்னர் மன்னன்

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிரடி…வில்வித்தையில் இந்தியா அசத்தல் வெற்றி

Admin

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

Leave a Comment