ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் RDO ஆபீஸ் செல்ல தேவையில்லை… புதிய நடைமுறை அறிவிப்பு

SHARE

ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் ஆர்.டி.ஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டும் என்றால், ஏதேனும் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த பின்பு மாவட்ட ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை குறிப்பிட்ட விதிமுறைகள் படி இயக்கி காட்ட வேண்டும்.

சரியான விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை முறையாக இயக்கினால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். ஆனால் ஜூலை 1ம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருவதாக மத்திய சாலை போகுவரத்துதுறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், உரிய அங்கீகாரம் பெற்ற மத்திய அரசின் பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க “simulator” எனப்படும் மாதிரி வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் நன்கு கற்றறிந்த பின்பு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது பயிற்சி பெற்ற நபர் ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு நடைபெறும் சோதனையில் பங்கேற்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறமையான ஓட்டுனர்கள் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் ஏராளமான விபத்துகள் நடப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இந்த புதிய நடைமுறைகள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

கேரளாவை மீண்டும் உலுக்கிய வரதட்சணை மரணம் – பொதுமக்கள் அதிர்ச்சி

Admin

உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பரிந்துரை.. நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

Leave a Comment