இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

SHARE

கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்.டி.ஏ. நிராகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தாக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கண்டுபிடிப்பை அடிப்படையாக கொண்டு சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது.

இதில் கோவாக்சின் தடுப்பூசியை தேசிய வைராலஜி நிறுவனம், ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வருகின்றன.

இந்த மருந்தானது 3ஆவது கட்ட பரிசோதனை முடிவுகளை தெரிவிக்காமலேயே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில் கூட்டு நிறுவனமான ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தது.

ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.

மேலும் கூடுதலாக பரிசோதனைகள் நடத்திய முடிவுகளை தர வேண்டும் என்றும், அதன்பிறகே அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தடுப்பூசி சோதனையிலிருந்து ஒரு பகுதி டேட்டாவை மட்டுமே சமர்பித்ததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தங்களுக்கு அனுமதி கிடைக்கும் என ஒகுஜன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமான டபிள்யூ.ஹெச்.ஓ.-வும் கோவாக்சின் மருந்திற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர்…!

Admin

கொரோனாவை வென்ற இஸ்ரேலில் கூட்ட நெரிசலால் 44 பேர் மரணம்!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

துப்பாக்கி முனையில் செய்தி வாசித்த பத்திரிக்கையாளர்.. வைரல் வீடியோ

Admin

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

Admin

Leave a Comment