மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

SHARE

தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை காப்பாற்ற ஒரு கிராமமே இணைந்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பாஸ்கர் ராவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான மருத்துவர் பாக்யலட்சுமி குண்டூர் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் தம்பதியினர் இருவரும் கரஞ்சேடு கிராமத்தில் தங்கியிருந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சையும், நோய் தொற்று குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையே தம்பதியினர் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மருத்துவர் பாஸ்கர் ராவ் நிலைமை கவலைக்குள்ளானது.

அவர் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் ஆக்சிஜன் உதவி மூலம் சிகிச்சை பெற்றுவந்தார்.

மேலும் கடந்த மே 3 ஆம் தேதி பாஸ்கர் ராவின் நிலை மோசமடைந்ததால், விஜயவாடாவில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அவருடைய சிகிச்சைக்கு சுமார் ரூ.1.5 முதல் 2 கோடி ஆகுமென மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி பாக்கியலட்சுமி சிகிச்சைக்கான தொகையை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து மே 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சோமாஜிகுடாவின் யசோதா மருத்துவமனைக்கும், மறுநாள் ஹைதராபாத் கச்சிபல்லி மருத்துவமனைக்கும் பாஸ்கர் மாற்றப்பட்டார்.

அவரின் சிகிச்சைக்கான பணத்தேவையை கேள்விப்பட்ட கரஞ்சேடு கிராம மக்கள் தங்களால் முடிந்த தொகையை கொடுக்க ரூ.20 லட்சம் மனைவி பாக்கியலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

Leave a Comment