இரு இயக்குனர்களின் புதிய திரைப்படம்… ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறவிருக்கும் நடிகர் ஜெய்..!!!

SHARE

ஒரே சமயத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் வெவ்வேறு இயக்குனர்களுடன் நடிகர் ஜெய் இணைகிறார் .

2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெய், சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஜருகண்டி என்ற திரைப்படத்தில் பாடகராக அறிமுகமான ஜெய், சுசீந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் திரைப்படத்தில் ஹீரோவாகவும், இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யின் திரைப் படத்தில் வில்லனாகவும் ஜெய் நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் அட்லீயின் திரைப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் சுந்தர் சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

“நாங்க வேற மாதிரி” – வலிமை பாட்டை கொண்டாடும் ரசிகர்கள்

Admin

40 திருமணம் கூட செய்துகொள்வேன்: கடுப்பான வனிதா விஜயகுமார்

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

நடிகர் சோனுசூட்டை காண ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

மார்ச் 1இல் கில்லி ரீரிலீஸா? உண்மையான தேதி என்ன?

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

Leave a Comment