வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

SHARE

பிரபல நடிகை கங்கனா ரனாவத், வேலை இல்லாத காரணத்தால் கடந்த வருட வருமானவரியின் பாதித்தொகையை செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் தனது வருமானத்தில் 45 சதவீதத்தை வரியாக செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட அவர், கொரோனா கட்டுப்பாடு காரணமாக படப்பிடிப்பின்றி வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், வேலை இல்லாததால், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் பாதியை மட்டுமே செலுத்தி இருப்பதாகவும், வரி செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் தனக்கு வட்டிக்கு மேல் வட்டி போடப்படுவதாகவும் கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டு வந்த கங்கனா ரனாவத் முதன்முறையாக இப்படி ஒரு பதிவை இட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

கங்கனா நடிப்பில் பன்மொழியில் உருவாகியுள்ள தலைவி திரைப்படம், கொரோனா காரணமாக திரையிடுவதில் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

Leave a Comment