இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

SHARE

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இன்னல்களை குறைக்கும் வகையில் மக்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.அந்த வகையில் பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் குறித்து அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல், பதிவு செய்யப்படுவது சட்டமாக்கப்பட்ட ஒன்று.

இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை கால தாமத கட்டணம் ரூபாய் 100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டுக்குள் கால தாமத கட்டணம் ரூபாய் 200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் கால தாமத கட்டணம் ரூபாய் 500 ஆகவும் உள்ளது. இந்த கட்டண முறையானது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதன் அடிப்படையில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அந்தக் கால தாமத கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

ரோட்டில் ரகளை செய்த வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

அணிலை தொடர்ந்து பாம்பு.. சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

Leave a Comment