கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

SHARE

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் இச்சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஒரு சிலருக்கு பூஞ்சை நோய்களின் தாக்கம் ஏற்பட்டது. 

கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் புஞ்சை என மூன்று வகைப் பூஞ்சைகளின் தாக்கங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள், நெடுங்காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் ஆகியோர் பூஞ்சைத் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதாகக் கூறப்படுகிறது. 

இவற்ரில் கருப்புப் பூஞ்சையின் தாக்கமே அதிகம் கண்டறியப்பட்டு உள்ளன. பல மாநிலங்கள் கருப்புப் பூஞ்சையை கொள்ளை நோயாக அறிவித்து உள்ளன. கருப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆம்போடெர்சின் – பி என்ற மருந்து பயன்படுத்தப்ப்ட்டு வருகின்றது. 

கருப்புப் பூஞ்சை மருந்துக்கான தேவை தினசரி அதிகரிப்பதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா ஜெனிடிக் லைஃப் சைன்ஸ் – என்ர நிறுவனம் கருப்பு பூஞ்சைக்கான மருந்தைத் தயாரித்து உள்ளது. 

இந்த மருந்து வரும் மே 31 முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் அதன் விலை 1200 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மருந்து முதல்கட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் எனவும், பின்னர் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் உள்ள குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும்அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

Admin

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

Leave a Comment