Close Menu
Mei EzhuththuMei Ezhuththu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Facebook X (Twitter) Instagram
Home » முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.
அரசியல்

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

இரா.மன்னர் மன்னன்By இரா.மன்னர் மன்னன்May 23, 2021Updated:May 23, 202103 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

மானுட வாழ்க்கையே இணைந்து வாழ்வது தான். கூடுவதே அமைப்பாதலின் தொடக்கநிலை. மனித சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் அமைப்புகளை உருவாக்கி அவ்வமைப்புகளோடு ஒன்றிணைந்து அமைப்புகளாலேயே இயங்குகிறது. மனிதன் – குடும்பம் – சமூகம் – சாதி – மதம் – இனம் – பொருளாதாரம் – அரசு என நாகரீகத்தின் ஒவ்வொரு படிநிலைகளிலும் அமைப்புகள் பரிணமிக்கின்றன. 

ஆயினும் அமைப்பாதல் அனைவருக்கும் சாத்தியமில்லை. எளியவர் பிரிந்து நிற்க வலியவர்கள் ஒன்றிணைந்து சுரண்டுவதே இதுவரை உலக வரலாறாக தொடர்கிறது. அதிகாரத்தை வென்றெடுக்க ஒடுக்குமுறையை எதிர்கொள்ள எளியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம். ஆனால் எவ்வாறு போராடுவது? எப்படி போராடுவது? மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது எப்படி? எத்தகைய அமைப்பாய்த் திரள்வது? ஏன் நாம் அமைப்பாய்த் திரளவேண்டும்? நாம் அமைப்பாய்த் திரள்வதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? அமைப்பாய்த் திரண்ட பின் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய செயல்திட்டங்கள் என்னென்ன? நம்முடைய இலக்கு என்ன? குறிக்கோள் என்ன? இலக்கை நோக்கிய பாதையில் நாம் சந்திக்கும் தடைக்கற்கள் என்னென்ன? அத்தடைக்கற்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? – ஆகிய கேள்விகளுக்கு பதிலாக, அமைப்பு உருவாக்கத்தின் அனைத்து படிநிலைகளையும் பரிணாமங்களையும் மிகத்தெளிவாகவும் ஆழமாகவும் விவரித்துள்ளார் முனைவர் தொல். திருமாவளவன்.

அமைப்பு உருவாக்கம் குறித்து பரந்த தளத்தில் விரிந்த நோக்கோடும் ஆழமான புரிதல்களோடும் வெளிவந்த முதல் தமிழ் நூலாக இதனைப் பார்க்கிறேன். ஓர் பல்கலைக்கழகத்தின் தலைமையில் பல்வேறு ஆளுமைகளை ஒன்றிணைத்து ஆய்வு செய்து எழுதி செய்து முடிக்க வேண்டிய வேலையை முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒற்றை மனிதராக செய்து முடித்திருக்கிறார். இந்நூலை படித்த பின் திருமாவளவன் அவர்கள் குறித்து என் மனதில் நான் முன்னர் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் முற்றுமுழுதாக மாறிவிட்டது. தமிழ்ச்சமூகம் உச்சிமுகர்ந்து ஆரத்தழுவி கொண்டாட வேண்டிய ஓர் சிந்தனையாளர்தான் தொல். திருமாவளவன். திருமாவளவன் அவர்களின் முழு ஆளுமைத்திறனையும் தமிழ்ச்சமூகம் இன்னும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிற குறை என்னுள் தோன்றுகிறது.

புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை விட அவை சொல்லப்பட்ட விதம்தான் என்னை ஆச்சரியப்படுத்தியது. நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மிகுந்த செறிவான கருத்துக்களையும் கனமான சொற்களையும் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறன. வார்த்தைக்கு வார்த்தை சங்கிலி தொடர்பு போல் ஓர் கோர்வையாக தொடர்ச்சியாக வரிகள் நீளுகின்றன. இந்நூலின் உள்ளடக்கத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளின் தலைப்பை படித்தாலேயே இது உங்களுக்கு புரிய வரும். 

கட்டுரையின் முதல் வரியில்  இருந்து இறுதி வரி வரை அச்சங்கிலித்தொடர்பு எந்த ஒரு இடத்திலும் அறுபடவில்லை. மிகுந்த கவனத்தோடு இந்நூலை திருமாவளவன் அவர்கள் இயற்றியிருப்பதில் பார்க்கையில் தன் வாழ்வில் தமிழ்ச்சமூகத்திற்கு தான் ஆற்றிய பெருந்தொண்டாக இந்நூல் விளங்க வேண்டும் என்று கருதி அவர் இந்நூலை எழுதியிருக்கிறார் என்று புரிகிறது. ஓர் கட்சியின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக சமூகத்தின் பல்வேறு செயல்தளங்களில் ஒய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் இவரால் எப்படி ஓர் எழுத்தாளுமை மிக்க சிறந்த இலக்கியவாதி போல் இவ்வளவு நேர்த்தியாக எழுத முடிந்தது என வியப்பாக இருக்கிறது!

இந்நூலில், மேற்கோள் நூல்கள் (Reference) என்று எந்த நூல்களையோ இணையதளங்களையோ அவர் குறிப்பிடவில்லை. இந்நூல் முழுக்க முழுக்க அவருடைய கள அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டதாக தோன்றுகிறது. நூலில் வேறு சிந்தனையாளர்களின் மேற்கோள்கள் கூட இல்லை, ஆனால் பல புகழ்பெற்ற கருத்துகளின் தாக்கங்களைத் தனது கள அனுபவத்தில் இருந்து தொல்.திருமாவளவன் பதிவு செய்திருக்கிறார்.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள், செயல்திட்டங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் எந்த முற்போக்கு இயக்கமும் கட்சியும் (திருமாவளவன் அவர்களின் விசிக உள்பட) அவ்வாறு செயல்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. நான் உணர்ந்த வரையில் இந்நூலின் செயல்வடிவமாக விளங்கியது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே! இந்நூற்றாண்டில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து அமைப்பாக்கி தமக்கான சுதந்திர அரசாங்கத்தை கட்டமைத்து உலக அரங்கில் தமிழர்களை அதிகாரமயமாக்கிய ஓர் ஆகச்சிறந்த விடுதலை இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள்! இந்நூலின் ஒவ்வொரு கட்டுரைகளையும் படிக்கும்போது என் மனவோட்டத்தில் புலிகளே நடமாடுகிறார்கள்.

தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், ஒடுக்கப்பட்டோர் நலன், உழைப்பாளர் நலன், சிறுபான்மையினர் நலன் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் சீர்த்திருத்தத்திற்கும் செயலாற்றும் முற்போக்கு இயக்கங்களும் கட்சிகளும் இந்நூலை அவசியம் படித்து தாங்கள் செயல்படும் பாதையை மேலும் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 520

விலை: ரூ. 325

– சந்திரன்


SHARE
amaipai thiralvom book book review அமைப்பாய் திரள்வோம் திருமாவளவன் தொல்.திருமாவளவன் விசிக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
இரா.மன்னர் மன்னன்
  • Website

Related Posts

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

பிரபாகரன் உயிருடன் உள்ளார் : பரபரப்பை ஏற்படுத்திய பழ. நெடுமாறன் , நடந்தது என்ன?

February 13, 2023

200 நாட்களாகப் போராடும் மக்கள்… கண்டுகொள்ளாத அரசு… பரந்தூரில் நடப்பது என்ன?

February 12, 2023
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202123 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 202110 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20215 Views

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

March 28, 20215 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202123 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 202110 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20215 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Threads
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.