குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

SHARE

குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, 1000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்து உள்ளார்.

குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ்தே  புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு பலர் பலியாகி உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ராணுவத்தினர் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் பணியிலும், அரசு அதிகாரிகள் புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பாவ்நகர் சென்ற பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு முடிந்தபோது குஜராத்துக்கு இடைக்கால நிவாரணமாக 1000 கோடி ரூபாயை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் டவ்-தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி குஜராத்தில் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment