கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது!: நடுக்கத்தில் தென்னாப்பிரிக்கா!.

SHARE

தென் ஆப்பிரிக்காவில் உள்ள காவ்டெங் மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவி வருவதாக அந்த மாகாண பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காவ்டெங், தென்னாப்பிரிக்கா.

தென் ஆப்ரிக்காவின் காவ்டெங் மாகாண பிரதமர் டேவிட் மக்குரா, நாடு முழுவதும் கொரோனா மூன்றம் அலை பரவவில்லை என்றாலும் காவ்டெங் மாகாணத்தில் அது தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த மாகாணத்தில் 600 ஆக இருந்த தொற்று இரண்டு நாட்களில் 1200 ஆக அதிகரித்துள்ளது எனவும் இரண்டு நாட்களிலேயே இருமடங்காக தொற்று பரவுவது அபாயகரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவ்டெங் மாகாணத்தில் கடந்த பல வாரங்களில் முதல்முறையாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16.05 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 15.20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

காவ்டெங் மாகாணம் தென்னாப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார மண்டலம்  எனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் பொருளாதார பிரச்சனை காரணமாக அங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படவில்லை. 

‘மருத்துவக் கட்டமைப்பில் பின்தங்கியுள்ள தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும். ஆனால் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி, பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருப்பது நாட்டை பெரும் சிக்கலில் தள்ளும்’ என இதனை மருத்துவ வல்லுநர்கள் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

Admin

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

Leave a Comment