கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

SHARE

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அமைப்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். 

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகல் உயிரிழந்த சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அயல்நாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்தாலும் மருத்துவமனைகளில் போதிய வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பலர் மருத்துவமனையின் வாயில்களில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.  இந்த சூழலில் தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்றும்,  கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அமைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக சுகாதாரத்துறையுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தியா முழுவதும் ஆம்புலன்ஸ்கள், படுக்கைகள் ஆகிய இரண்டுமே பற்றாக்குறையில் உள்ள இந்த சூழலில் தமிழக அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

Admin

ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

Leave a Comment