ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

SHARE

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவுகளை உடையவர்கள் கொரோனாவுக்கு இலக்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் இச்சூழலில் அதை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவின் தாக்குதலுக்கு யாரெல்லாம் எளிதில் இலக்காகிறார்கள் என்பது குறித்து இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு அமைப்பான சிஎஸ்ஐஆர் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 

அந்த ஆய்வின் முடிவுகளில்  ‘ஏபி’ மற்றும் ‘ஏ’ இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.மேலும் ஓ இரத்தப்  பிரிவை சேர்ந்தவர்கள் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு கொரோனாவின் அறிகுறிகள் கூட தீவிரமாக வெளிப்படுவது இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

அத்தோடு நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் அதிகம் உள்ள சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு சீனா, இத்தாலி,ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் இரத்த வகைக்கும் கொரோனா பரவலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே தங்கள் ஆய்வுகளில் கூறி இருந்தன என்பதால் சிஎஸ்ஐஆரின் இந்த ஆய்வு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

ஆனால் சில குறிப்பிட்ட மாதிரிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்பதால், இதன் முடிவுகளை அப்படியே ஏற்க இயலாது என்றும் பல மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

Leave a Comment