பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

SHARE

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதலாவது சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குவதால் கலைவாணர் அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இட நெருக்கடி காரணமாக தமிழக அரசின் சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகின்றது. அதனால் நேற்றே கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற அவரது முழக்கத்தோடு வைக்கப்பட்டது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் வளர்ந்து வருவதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவாரின் புகைப்படத்தை பேரவையில் வைப்பதா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் உருவப்படம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதனை அப்போதைய பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் 1948ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் படம் திறந்து வைக்கப்பட்டது, பின்னர் மறைந்த முதல்வர்களின் புகைப்படங்கள் திறக்கப்பட்டன. இந்த வரிசையில் ஜெயலலிதாவின் படம் 11ஆவது படம் ஆகும். இந்நிலையில் சட்டப் பேரவையில் வைக்கப்பட்ட படம் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் அவரது புகைப்படம் இடம்பெறுவது முறையானது ஆகும். இதனை அறிந்தே ஆளும் திமுக அரசு இந்த மரியாதையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கி உள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது திமுகவை சேர்ந்த இருவர் அம்மா உணவகத்தின் பெயரை நீக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கவும் பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்ததன் மூலம் ஜெயலலிதா குறித்த தங்கள் நிலைப்பாட்டை திமுக பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

“இப்ப தெரியுதா திமுகன்னா என்னன்னு” – எஸ்.பி.வேலுமணியை அன்றே எச்சரித்த மு.க.ஸ்டாலின்

Admin

சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

“நான் கடன்காரனா இருக்க விரும்பல” – ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த “நவீன காந்தி”

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

‘‘ஸ்டேன் சாமி மரணம்சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

Admin

“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

Admin

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Admin

Leave a Comment