ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

SHARE

கொரோனா நிவாரணத் தொகையாக குடும்பங்களுக்கு தலா ரூ.4000 தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணிகள் இன்று தொடங்குகின்றன.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக அறிவித்து இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் அந்த வாக்குறுதியை திட்டமாக்கினார்.

அதன் அடிப்படையில் தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் பணிகளை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதன்படி குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம். 

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த டோக்கன்களில் நிவாரணம் தொகை வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்தத் தொகை 500 ரூபாய் நோட்டுகளாகவோ 2000 ரூபாய் நோட்டாகவோ வழங்கப்படும். தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வைத்துள்ள 2 கோடியே 7 லட்சம் பேர் இதனால் பயனடைய உள்ளார்கள்.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Admin

நடிகைக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர், டிரைவருக்கு சம்மன்

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

Admin

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

Leave a Comment