ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

SHARE

ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டெல்லி

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் செய்வதாக கூறியது. புது கேப்டன்சியின் கீழ் சன்ரைசர்ஸ் அணி வார்னர், சுசித், கவுல் ஆகியோருக்கு மாற்றாக நபி, புவனேஷ்வர், சமத் ஆகியோருடன் களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியும் உனத்கட், சிவம்டூபே க்கு மாற்றாக தியாகி, அனுஜ் ரவாட் ஆகியோரைக் களம் இறக்கியது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால். மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்ந்தது. ரஷித் கானின் ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து, எல்பிடபிள்யூ வில் வெளியேறினார் ஜெய்ஸ்வால். அடுத்து பட்லருடன் கைக்கோர்த்தார் சஞ்சு சாம்சன். பவர்பிளே ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால் ஆட்டமே பவர்பிளேவிற்கு பிறகுதான் ஆரம்பமானது. 

7ஆவது ஓவரில் 2 சிக்ஸர் 2 வைடு என 16 ரன்களை கொடுத்தார் விஜய்சங்கர். யார் பந்தை வீசுகிறார்கள் என்ற கவலை இல்லாமல் விளையாடினர்கள் பட்லரும் சாம்சனும். 13ஆவது ஒவரில் தன்னுடைய அரை சதத்தை கடந்தார் பட்லர். ரன்களை அள்ளி குவித்தது இந்தக் கூட்டணி. ஆட்டத்தின் 17வது ஓவரில், சங்கரின் பந்தில் தூக்கி அடித்து கேட்ச் ஆனது சஞ்சு சாம்சனின் விக்கெட். 48 ரன்களை எடுத்து வெளியேறினார் சாம்சன். அதே ஓவரின் கடைசி பந்தில் 1 ரன்னைத் தட்டி விட்டு ஐபிஎல்லில் தன்னுடைய  முதல் சதத்தை கடந்தார் பட்லர் அதுவும் 56 பந்துகளில். பின்னர் 19ஆவது ஒவரில் சந்தீப்பின் பந்தில் போல்ட் ஆனது பட்லரின் விக்கெட். 64 பந்துகளில் 124 ரன்களை எடுத்து வெளியேறிய பட்லரை, ’சூப்பர் தல’ என்று வரவேற்றனர் ராஜஸ்தான் அணியினர். இறுதியில் 220 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி. 

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் மணீஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ. நிதானமாக, பந்துகளை கவனித்து ஆடி பவர்பிளே ஓவரின் முடிவில் 57 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. ’பரவாயில்லையே புது கேப்டன்சியில ஆட்டம் நல்லாதான் போயிட்டு இருக்குன்’ம்மு சொல்லி முடிப்பதற்குள் அடுத்தடுத்து விழுந்தன விக்கெட்கள். 7ஆவது ஓவரில் முஸ்தாபிசூரின் பந்தில் போல்ட் ஆனது மணீஷ் பாண்டேவின் விக்கெட். அடுத்து 8ஆவது ஓவரில், ராகுல் திவாட்டியாவின் பதில் கேட்ச் ஆனது பேர்ஸ்டோவின் விக்கெட். சன்ரைசர்ஸின் முக்கிய விக்கெட்டுகள் வெளியேறின. புது கேப்டன் வில்லியம்சன், அவரது பங்குக்கு அவராவது அடித்து ஆடி இருக்கலாம். தியாகியின் பந்தில் வில்லியம்சன் அடித்த  பந்து மோரிஸிடம் கேட்ச் ஆக 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார் வில்லியம்சன். அடுத்தடுத்த வீரர்களும் பெரிதாக ரன் எடுக்கவே இல்லை. 18 வது ஓவரிலேயே 8 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 20 ஓவருக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. 

சன்ரைசர்ஸ் அணியினர் அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி போட்டி இதுதான். நன்றாக விளையாட கூடிய வார்னரை விலக்கி விட்டு ஆடினால் இது தான் கதி என்பது போல் இருந்தது ஆட்டம். கேப்டன்ஸி சரியில்லை என்பதற்காக கேப்டன் பதவியை பறிப்பது நியாயம்தான் என்றாலும் ஆட்டத்தில் இருந்து விலக்குவது சரியான முடிவா? – என்ற கேள்விதான் எழுகிறது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தங்கம் வென்றால் கொண்டாட தெரியும்.. ஆனால் அதுக்கு உதவ தெரியாது.. மோடி மீது கடுப்பான பயிற்சியாளர்

Admin

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

தோனிக்காக உயிரையும் கொடுக்கத் தயார்… ரசிகர்களை நெகிழ வைத்த கே.எல்.ராகுல்

Admin

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

Leave a Comment