ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

SHARE

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அகமதாபாத்

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பவுலிங் செய்வதாக கூறியது. இரண்டு அணிகளும் மாற்றங்களுடன் களம் இறங்கினர். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில், வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக ஷாபாஸ் விளையாடுவதாகவும், பஞ்சாப் கிங்ஸ் அணியில், காயம் காரணமாக மயாங் அகர்வால் இல்லை, ஹென்றிக்ஸ், அர்ஷ்தீப் அவர்களுக்கு மாற்றாக ப்ரப்சிம்ரன், ஹர்ப்ரீத் விளையாடுவதாகவும் தெரிவித்தனர். 

கேஎல் ராகுல். ப்ரப்சிம்ரன் உடன் கள இறங்கி நல்ல தொடக்கம் தந்தார். 4ஆவது ஓவரில் ப்ரப்சிம்ரன் அவுட்டாகி விட கெயில் உடன் கூட்டணி சேர்ந்தார் ராகுல். அட்டகாசமான கூட்டணி, ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர்கள் என தெறிக்க விட்டார் ராகுல். ஆட்டத்தில் கேஎல் ராகுல் 5 சிக்ஸர் 7 பவுண்டரி என 57 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து நாட் அவுட்டில் இருந்தார். சிராஜின் பந்தில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர், சஹலின் பந்திலும் டீப் மிட் விக்கெடில் ஒரு சிக்ஸர், சாம்ஸின் பந்தில் லாங் ஆஃப் ஏரியாவில் ஒரு சிக்ஸர், ஜேமிசன் பந்திலும் டீப் லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸர், கடைசி ஓவரில்  ஹர்ஷல் பட்டேல் போட்ட யாக்கர் பந்திலும் அழகான ஒரு சிக்ஸர் என கேஎல் ராகுலின் சிக்ஸர்கள் வான வேடிக்கைகள்தான். 

கெயில் கூட்டணியில் வேகம் எடுத்த ராகுல், கெயில் விக்கெட் வீழ்ந்த பின் தடுமாறினார். 15 வது ஓவரில் ஹர்ப்ரீத் உடன் கைகோர்த்தார் ராகுல். இந்த கூட்டணி நிஜமாகவே  பஞ்சாபின் வெற்றிக்கு கைகொடுத்தது. 16, 17 வது ஓவரில் தட்டி கொண்டிருந்த ஹர்ப்ரீத்தை பார்த்து தட்டிக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது, தூக்கி விடு என்று கூறினார். அவருடன் சேர்ந்து ராகுலும் கடைசி ஓவரில், பட்டேலின் பந்தில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர்களை அடித்து 150 இல் இருந்த ஸ்கோரை 179க்கு கொண்டு வந்தனர்.

கெயில் ஒரு சில ஆட்டங்களில் தடுமாறினாலும், அதை ஈடு செய்யும் வகையில் இந்த ஆட்டத்தில் கெத்து காண்பித்தார்.  2 சிக்ஸர், 6 பவுண்டரி என 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் கெயில். ஆரம்பத்திலேயே அடித்து ஆடிய கெயில் மூலம் ராகுலுக்கு நல்ல வேகம் கிடைத்தது. இதனால் கெயில் மற்றும் ராகுலின் கூட்டணியில் 80 ரன்கள் கிடைத்தன. ஜேமிசனின் 2ஆவது ஓவரில் கெயிலின் ஆட்டத்தில் ஆர்சிபியே அலறியது. முதல் பந்தில், லாங் ஆஃப்பில் ஒரு பவுண்டரி, 2ஆவது பந்தில், மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி, 3ஆவது பந்தில், லாங் ஆன்னில் ஒரு பவுண்டரி, 4ஆவது பந்தில், மறுபடியும் லாங் ஆன்னில் ஒரு பவுண்டரி, 5ஆவது பந்து, டாட் பந்தாகிட, 6ஆவது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் ஏரியாவில் ஒரு பவுண்டரி என 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் கெயில். வாயை பிளந்து நின்றது ஆர்சிபி. இறுதியில் சாம்ஸின் பந்தில் தூக்கி அடிக்க முயன்று, டிவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனது கெயிலின் விக்கெட்.

ஹர்ப்ரீதின் முதல் போட்டி, ஆரம்பமே அமர்க்களப்படுத்தி விட்டார். இந்த முதல் போட்டியிலேயே பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் அசத்திவிட்டார் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர் தான். பேட்டிங்கில் கடைசி 5 ஓவரில் ஆட்டத்தையே மாற்றிவிட்டார். 18ஆவது ஒவரில் பட்டேலின் பந்தில், மிட் ஆஃப்பில் ஒரு பவுண்டரி, லெக் சைட் பவுண்டரியில் ஒரு சிக்ஸர் என பறந்தது பந்து. கடைசி 5 ஓவரில் 61 ரன்கள் ராகுல் மற்றும் ஹர்ப்ரீதின் கூட்டணியால் கிடைத்தன. 17 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 

பேட்டிங்கில் கைகொடுத்தவர், பவுலிங்கிலும் மிரள வைத்தார். 

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் ஆனார் ஹர்ப்ரீத். 11 வது ஓவரில், கோலியின் விக்கெட் லெக் ஸ்டெம்பிலும், அதே ஓவரில், மேக்ஸ்வெல்லின் விக்கெட் ஆஃப் ஸ்டெம்பிலும் போல்ட் ஆகின. ஒரே ஓவரில் 2 விக்கெட்கள். ஆட்டமே மாறிப்போனது. பின்னர் 13ஆவது ஓவரில் டிவில்லியர்ஸின் விக்கெட் என மொத்தம் மூன்று விக்கெட்களை இவர் எடுத்தார். இந்த மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்ததினாலோ என்னவோ ஆர்சிபியின் ஆட்டம் பஞ்சாபிடம் எடுபடவே இல்லை. 

முந்தைய போட்டிகளில் 200க்கும் மேல் ரன்கள் அடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நேற்று 180 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் திணறிப் போனது. கோலி, படிக்கல், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என சூப்பர் பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஆர்சிபி தோல்வியை தழுவியதை ரசிகர்களால் ஏற்கவே முடியவில்லை. 

மெரிடித்தின் பந்துக்கு ஆர்சிபி திணறியது. இதனால் மெரிடித்தின் பந்தில் மூன்று ஓவரிலேயே படிக்கல் போல்ட் ஆகிச் சென்றார்.  கோலியும் ஹர்ப்ரீத் பந்தில் போல்ட் ஆனார். அடுத்தடுத்து  மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என விக்கெட் மழைதான். ஆர்சிபியின் மேட்ஸ்மேன்கள் தான் ஆட்டத்தில் சொதப்பினார்கள் என்றால் பவுலர்களும் சுமாராகத்தான் விளையாடினார்கள். பட்டேல் ஆரம்பத்தில் கிடுக்குபிடி பிடித்தாலும் கடைசி ஓவரில் பதற்றத்தில் ரன்களை அள்ளி கொடுத்துவிட்டார். பர்ப்பிள் கேப் ஹோல்டர் இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. ஜேமிசன் சற்று நன்றாக ஆடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் ஆர்சிபியால் 20 ஓவர்களுக்கு 145 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. ஆர்சிபி தோற்றது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

கேரளாவை மீண்டும் உலுக்கிய வரதட்சணை மரணம் – பொதுமக்கள் அதிர்ச்சி

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

Leave a Comment