ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

SHARE

நாடெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கேரளா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன் நிற்கிறது. தற்போது கேரளத்தில் ‘ஆக்சிஜன் வார் ரூம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரளா

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், நம் அண்டை மாநிலமான கேரளா போதுமான அளவு ஆக்ஸிஜனை முன்கூட்டியே திட்டமிட்டு கையிருப்பு வைத்து நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது.  கொரோனாவின் முதல் அலையிலேயே கேரளா கூடுதல் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விட்டதாகவும் தேவையான அளவு கையிருப்பு இருப்பதை தொடர்ந்து உறுதி செய்து வந்ததாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள, தேவையான ஆக்ஸிஜன் கேரள மருத்துவமனைகளிலும் உள்ளதாகவும். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டு வைத்துள்ளதாகவும் கேரளி சுகாதாரத்துறை அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

தற்போது ஆக்ஸிஜன் சப்ளையை ஒழுங்கு படுத்துவதற்காக, “வார் ரூம்” என்ற புதிய அமைப்பை கேரள அரசு பல்வேறு மாவட்டங்களில் திறந்து உள்ளது. கிட்டத்தட்ட 80 இடங்களில் இத்தகைய சிறப்பு வார் ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆக்ஸிஜன் இருப்பு எவ்வளவு உள்ளது, எங்கு எவ்வளவு தேவை? – என்பதை கேரள அரசு வரையறுத்து திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.

முன்னதாக கர்நாடக அரசு ஆக்சிஜன் வார் ரூம்களை திறந்த நிலையில், அந்தத் திட்டத்தைக் கேரள அரசு தற்போது இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தி உள்ளது. இதனைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

  • பிரியாவேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

Leave a Comment