கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

SHARE

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் இச்சூழலில் தங்கள் உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. 

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான விளைவுகளை உருவாக்கி உள்ள நிலையில், வட மாநில மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்தியாவின் நிலையைக் கண்டு பல நாடுகள் உதவி செய்ய முன் வந்த நிலையில் ஐநா சபையும் தனது உதவி கரத்தை நீட்டி இருந்தது. ஆனால் இந்தியா அதை நிராகரித்து விட்டதாக தனது வருத்தத்தை ஐ.நா. வெளியிட்டு உள்ளது. 

இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக் கருவிகளை வழங்க ஐ.நா. தயாராக இருந்ததாகவும். ஆனால் இந்திய அரசு தற்போது போதுமான மருத்துவக் கருவிகள் உள்ளதால் ஐ.நா.வின் உதவியை வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்-சின் துணை செய்தி தொடா்பாளா் பர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா. தனது உதவியை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், தேவைப்படும்போது இந்தியா இந்த உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் மடியும் இச்சூழ்நிலையில் ஐநாவின் உதவியை இந்தியா நிராகரித்தது சரியா? – என பல தரப்பு மக்களும் இந்திய அரசின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

Leave a Comment