தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

SHARE

ஐபிஎல் லீக் போட்டியின் நேற்றைய 2வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை விழ்த்தி வெற்றி பெற்றது. 

வான்கடே, மும்பை

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய கேஎல் ராகுல், மற்றும் மயங் அகர்வால் நல்ல ஆட்டத்தை கொடுத்து இருவரும் 12 ஓவர் வரை பார்ட்னர்ஷிப்பில் விளையாடினர். மயங் அகர்வால் அதிரடியாக ஆடி முந்தைய போட்டிகளில் ஆட முடியாமல் போனதை இந்த போட்டியில் சரி செய்து பந்துகளை தெறிக்க விட்டார். வோக்ஸ், ரபாடா, லலித் என அனைத்து பந்துவீச்சாளர்களையும் திறமையாக எதிர்கொண்டார் விட்டார் மயங். ஆட்டத்தின் 13வது ஓவரில் மேரிவாலா பந்துவீச்சில் மயங் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கேஎல் ராகுல் நிதானமாக ஆடி தனது 33 வது அரை சதத்தை கடந்தார். கெயில் வந்ததற்கு ஃபிரீ ஹிட்டில் ஒரு சிக்ஸ் அடித்து, பின்னர் வோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி சென்றார். அடுத்து பூரானும், ஹுடாவும்  சில பவுண்டரிகளை தட்டி விட்டனர். 19வது ஓவரில் வந்த ஷாருக் கான், 20வது ஓவரில் ஸ்ட்ரைக் எடுத்து, 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என தூள் கிளப்பினார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது. 

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட வந்தது டெல்லி கேபிடல்ஸ். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ப்ரித்வி ஷா மற்றும் தவன், பஞ்சாப் அணியின் கேஎல்ராகுல் மற்றும் மயங் அகர்வால் போலவே நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆட்டத்தையே மாற்றி விட்டனர். பவர்பிளே ஓவர்களில் ப்ரித்வி ஷாவின் விக்கைட்டை மட்டும் எடுத்தார் அர்ஷ்தீப். பிரித்வி ஷா 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

டெல்லி அணிக்கு தவன் தான் ஆபத்பாண்டவனாக இருந்தார். தவன் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை அடிக்க தவறவே இல்லை. நிதானித்து ஆடி பந்துகளை தெறிக்க விட்டார் தவன். 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என ரன் சேஸிங்கை குறைத்துக் கொண்டே வந்தார். அடித்து ஆடிய தவன் எப்படியும் அவரே மேட்ச்சை முடித்து விடுவார் என்ற பயத்துடன் பஞ்சாப் இருந்த நிலையில், ஜூய் யின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். 49 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்தார் ஷிகர் தவன். 

அடுத்து ஆடிய ஸ்டாய்னிஸ் மற்று பண்ட் நிதானமாக அடி ரன்களை எடுத்தனர். பஞ்சாபுக்கு ஆப்பு 17 வது ஓவரில் தான் வந்தது. ஷமியின் பந்தை ஸ்டாய்னிஸ் அடித்து கேட்ச் போனது. ஆனால் டெல்லி அணி அந்த பந்து இடுப்புக்கு மேல் போனது என்று ரிவ்யூ சென்றனர். இதனால் பஞ்சாபுக்கு ஒரு விக்கெட் போனது. டெல்லிக்கு ஒரு நோ பாலும், ப்ரீஷிட்டும் அதில் ஒரு சிக்சரும் கிடைத்ன. டெல்லிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட நெருங்கியது. கடைசி பேட்ஸ்மேனாக வந்த லலித் 2 பவுண்டரிகளை தட்டினார். இறுதியில் 18.2 ஓவரில் ஸ்டாய்னிஸின் பவுண்டரியில் ஆட்டம் முடிந்து, டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

Leave a Comment