அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

SHARE

உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்றில் மியான்மர் நாட்டு அழகி அந்நாட்டில் நடந்துவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

‘மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்’ என்ற சர்வதேச அழகிப்போட்டி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் வெற்றி பெற்றவர்களின் இறுதிச் சுற்று தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றது.

இதில் மியான்மர் நாட்டின் சார்பில் கலந்து கொண்ட 22 வயது கல்லூரி மாணவி ஹான் லே என்பவர் நிகழ்வின் மேடையில் ஆற்றிய உரை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அந்த உரையில் அவர், மியான்மன்ர் நாட்டில் இராணுவம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து மக்களைக் கொன்று குவித்துவருவதாகவும், மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து போராடி வருவதாகவும் கூறினார். அத்தோடு சர்வதேச அளவில் உதவிகள் தேவைப்படும் நிலையில் மியான்மர் உள்ளதால் அனைவரும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஹான் லேவின் இந்த துணிச்சலான பேச்சுக்கு நிகழ்ச்சியின் தலைவர் உட்பட அரங்கத்தில் இருந்த பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக கைத்தட்டினர். இந்த ஹான் லே கடந்த மாதம் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தெரிவில் இறங்கிப் போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தாலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு… யாருக்கு என்ன பதவி?

Admin

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

Leave a Comment