9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

SHARE

கொரோனா பரவல் காரணமாக 9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசால் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் 10,12ஆம் வகுப்புகளும், பிப்ரவரியில் 9-12 வரையிலான அனைத்து வகுப்புகளும் இயங்கத் தொடங்கின.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் 12ஆம் வகுப்பு தவிர்த்த பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? – என்று ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் கேட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், மார்ச் 22 முதல் 9-11ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து என பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்து உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு நடக்கும்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

Admin

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.!!

Admin

வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

Admin

“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

Leave a Comment