ஆர்க்காடு இளவரசரிடம் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்

SHARE

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் ஆர்க்காடு இளவரசரிடம் ஆதரவு கேட்டார்.

நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரங்கள் தொடங்கியதில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்பதால் உதயநிதி திமுகவின் பேச்சாளராக தமிழ்நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது சென்னை திரும்பி உள்ள உதயநிதி, தனது தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார். இதன் முதல் கட்டமாக ஆர்க்காடு நவாப் குடும்பத்தின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மகாலில் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியை உதய நிதி ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கேட்டார்.

இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்க்காடு இளவரசர் ‘இசுலாமியர்கள் அதிகம் உள்ள பழைமை வாய்ந்த தொகுதி சேப்பாக்கம். இங்கு இளம் பறவையாகப் போட்டியிடும் கலைஞரின் பெயரன் உதயநிதி கட்டாயம் வெற்றி பெறுவார்’ என்று கூறினார்.

ஆர்க்காடு இளவரசருடனான சந்திப்புக்குப் பின்னர் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தைத் தொடர்ந்தார்.

நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

தாலிபான்கள் தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் .. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Admin

மேட்ச் பிக்சிங் இல்ல பர்ச்சேஸ் பிக்சிங் செய்துள்ளது அதிமுக : சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Admin

Leave a Comment