பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

SHARE

தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற பிக் பாஸ் குரல் மூலம் நிகழ்ச்சி ஆரம்பித்தது. 

இப்படி மொட்டையா சொன்னா என்னடா அர்த்தம், தவிர்க்க முடியாத காரணத்துலதான் போயிருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுதே டா, அது என்ன காரணம் அப்டிங்கறது தானடா முக்கியம்… நமீதா, தாமரைசெல்விக்கு நடந்த சண்டைக்கு, கமல் சார் வந்து பஞ்சாயத்து பண்ணுவாரு, ’இல்லையே நீங்க அப்படி சொன்ன மாதிரி இல்லையே, உங்க நமட்டு சிரிப்புக்கு வேற அர்த்தம் மாதிரி தெரிஞ்சுதே’ன்னு கொஞ்சம் எண்ணைய ஊத்திட்டு போயிருப்பாரு…. எதுக்குமே வழி இல்லாம போச்சே… – என பார்வையாளர்களுள் மைண்ட் வாய்ஸ் ஓடிக் கொண்டிருந்தது…

இந்த சீசனோட முதல் பஞ்சாயத்து நாள்ல, கமலின் பேச்சில் கிண்டல், கேலி, எல்லாம் இருந்தது, ஆனா அவரோட பேச்சு கொஞ்சம்… சாரி…. ரொம்ப போராவும் இருந்தது. அகம் டிவியே வழியே அகத்திற்குள் சென்றதும் கமல் ”ஆன்லைன் கிளாஸ்லாம் இப்பதான் ஆரம்பித்தார்கள், ஆனா நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டே”ன்னு சொன்னாரு. அது உண்மையாகவே ஆன்லைன் கிளாஸ் போலத்தான் இருந்தது.

வாரம் முழுவதும் நடந்த ஹவுஸ்மேட்ஸ்களின் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டிப் பேசினார் கமல். பிரியங்கா மற்றும் நிரூப்பின் சமையல் அறை பேச்சுகள். வருண் ’இந்த நிகழ்ச்சிலதான் இருக்கீங்களா?’ன்னு கேட்டது, சிபியை பார்த்து ’டீ போட கத்துக்கோங்க அது உங்கள எங்கயோ கொண்டு போயிடும்’னு சொன்னது, மதுமிதாவின் கொஞ்சும் தமிழ், அண்ணாச்சியின் ஆங்கிலம் கற்றல், சீக்கிரம் சொந்த வீடு வாங்க சொல்லி இசைவாணிக்கு வாழ்த்து கூறியது, எல்லார் கதையிலும் குறை கண்டுபிடிச்சுட்டு இருந்தா எப்படி கதாசிரியர்னு ராஜூவை குறிப்பிட்டது என்று அனைவரின் நடவடிக்கைகளையும் கூறினார். 

சின்னபொண்ணுவின் கதைக்கு டிஸ்லைக் கொடுத்தற்கான காரணத்தையும் ராஜூவிடம் கேட்டார். சின்னபொண்ணுவும் சொல்ல மறந்த கதைன்னு, கொஞ்சம் கதைய சொல்ல மறந்துட்டனு மறுபடியும் கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் யார்லா கதை சொல்லலன்னு மீதி இருக்குறவங்களுக்கு கதை எப்படி சொல்லப்போறீங்கன்னு கேட்டாரு கமல். 

கடைசியா உங்க கதையில சுவாரஸ்யம் இருக்கோ இல்லையோ, உண்மை இருக்கனும் என்று கூறினார் கமல். சுருதியின் கதை சமூகத்துக்கு எடுத்துகாட்டு, எல்லாரும் நோ சொல்ல பழகிக்கணும் – என்று கூறியது, பாவ்னியோட கதையை கொஞ்சம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, பாவ்னியோட வலி அதை அனுபவிக்குறவங்களுக்கு தான் தெரியும் என்று கூறியது என்று தொடர்ந்து பேசிய கமல், கூடவே நீட் தேர்வுக்காக மாணவர்கள் தற்கொலை செய்வது எவ்வளவு பெரிய மடத்தனம் என்றும் சொன்னார். 

ஐக்கியின் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி, புலம்பெயர் தமிழர்களின் பெற்றோர்களுக்கு உள்ள தமிழ் ஆர்வம் இங்குள்ள பெற்றோர்களுக்கு இருந்திருந்தால் நாம ஏன் தமிழ் வாழ்க என்று தனியாக கோஷம் போட வேண்டும் என்றும் கூறினார். 

தமிழ் இன்னும் உங்களை போன்றோரால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஐக்கியை வாழ்த்தினார் கமல். சனி ஞாயிறு சாப்பாடு வெளிய இருந்து வந்து ஹவுஸ்மேட்ஸ்லாம் சாப்பிட, ’தயவு செஞ்சு குப்பையெல்லாம் தொட்டியில போட்டு ப்ளேட் மட்டும் ஸின்க்ல வைங்க’ன்னு சொன்னங்க சுருதி… இது எப்போ பஞ்சாயத்தாகுமோ…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

Admin

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

‘மரணத்தின் விலை’ – புதிய சஸ்பென்ஸ் திரில்லர் தொடர்கதை நமது மெய் எழுத்து தளத்தில் வெளியாகிறது

இரா.மன்னர் மன்னன்

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

Leave a Comment