பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

SHARE

தூத்துக்குடியில் ஓய்வூதியம் கிடைக்காததால் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகள் பாத்திரம் கழுவும் நிலை அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுதந்திர போராட்டத் தியாகி மாடசாமி. இவர் சுதந்திரபோராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இதனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மாடசாமிக்கு தாமரை பட்டயமும், விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு மாடசாமி காலமானதால் அவரது ஓய்வூதியத்தை மனைவி வள்ளியம்மாள் பெற்று வந்தார். இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு வள்ளியம்மாள் மரணம் அடைந்ததால் தந்தைக்கு வழங்கி வந்த ஓய்வூதியத்தை திருமணம் ஆகாத தமக்கு வழங்க வேண்டும் என மாடசாமியின் மகள் இந்திரா அரசுக்கு விண்ணப்பம் செய்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திராவுக்கு ஓய்வூதியம் வழங்க கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் இந்திரா ஒப்படைத்து பிறகும், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திரா வேறு வழியின்றி உணவகத்தில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தி வருகிறார்.

மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்ட போது, இந்திராவின் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போது தமிழக அரசு தரப்பில் எந்த கோப்பும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இந்திராவின் கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் வந்த பின் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

Leave a Comment