திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

TN Marriage Aid
SHARE

திருமண நிதியுதவித் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளக்க குறிப்பு பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

அரசு அறிவிப்பின்படி,

திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது.

வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது.

மாடி வீடு – நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது.

ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்.

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

இந்நிலையில், எதன் அடிப்படையில் இவற்றை முடிவு செய்தார்கள் என்பது பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.

முதலில், ஆண்டு வருமானம் 72000 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது அன்று.

சித்தாள் வேலை செய்யும் பெண்களுக்கு ஒருநாள் ஒன்றுக்கு 500 சம்பளம் என்று வைத்துக்கொண்டால் 500×30=15000 மாதத்திற்கு பெறுபவர். 15000×12=180000 ஆண்டு வருமானம் என்று வைத்துகொண்டால் அவர்களுக்கும் திருமண உதவித்தொகை இனிமேல் கிடையாது கிடைக்காது.

அனால் அவர்களின் அன்றாடத்தேவைகள் எவ்வாறு பன்மடங்காக உயர்ந்து உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளாதது வருத்தமாக உள்ளது.

தமிழ்நாடு: மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

இன்றைய காலத்தில் அனைத்துத் திருமணங்களும் மண்டபத்தில் தான் நடக்கிறது. திருமண மண்டபத்தில் நடந்தால் உதவித்தொகை கிடையாது என்பதும் மிகவும் அபத்தமாக உள்ளது.

நல்ல வீடு இல்லாததன் காரணமாகத்தான் சமுதாயக் கூடம் ,சின்னச் சின்ன திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருமண மண்டபத்தில் திருமணம் நடத்தும் அனைவரும் வசதி படைத்தவர்களே என்று எதைவைத்து முடிவு செய்தார்கள் என்றுபுரியவில்லை. இதை எவ்வாறு வசதியின் குறியீடாய்ப் பார்ப்பது ஏற்புடையதும் அல்ல.

மாடி வீடு வைத்திருத்தல் என்பதால் இனி இனித்திருமண உதவி கிடைக்காது என்பதும் எற்புடையது அல்ல. நிதியமைச்சர் முதலில் தமிழகத்தின் பொருளாதர நிலையைத் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்பதுடன் இந்த வரையறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

1 comment

அதிமுக சகோதரர்களே... தொடரும் ஸ்டாலின் நாகரிகம் - Mei Ezhuththu September 8, 2021 at 12:28 pm

[…] திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அ… […]

Reply

Leave a Comment