2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

SHARE

புதுடெல்லி.

கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.

பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர்தான் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்பட்டன. தொடக்கத்தில் அதிகமாக மக்களிடம் புழங்கிய இந்த 2000 ரூபாய் வங்கித்தாள்களை சமீப காலங்களில் காணவே முடியவில்லை. 

இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘2000 ரூபாய் வங்கித்தாள்கள் மீண்டும் அச்சடிக்கப்படுகின்றவா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட, இந்தக் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமான விரிவான பதிலை அளித்தார்.

அதில், கடந்த 2016-17ஆம் ஆண்டில் 354 கோடியே 39 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாகவும், 2017-18ஆம் ஆண்டில் அது 11 கோடியே 15 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகவும் , 2018-19ல் அந்த எண்ணிக்கை இன்னும் குறைகப்பட்டு 4 கோடியே 666 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடப்படவே இல்லை – என்றும் கூறப்பட்டு உள்ளது.

நிதியமைச்சகத்தின் இந்த பதிலானது, ’2000 ரூபாய் வங்கித்தாள்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட பலனை அளிக்கவில்லை’ என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறிய குற்றச்சாட்டை ஏற்பதாகவே அமைந்துள்ளது.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய மத்திய அமைச்சரவை..யார் யாருக்கு என்னென்ன பதவி !

Admin

தமிழ்நாட்டைப் பிரிக்க எழுந்திருக்கும் விஷமக்குரல்களை அடக்கிட வேண்டும்: டிடிவி தினகரன்!

Admin

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் – அதிரவைக்கும் அரசின் வெள்ளை அறிக்கை

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

3 முறை தற்கொலை செய்த ஓபிஎஸ் சசிகலாவுடன் செல்வார்: நாஞ்சில் சம்பத்

Admin

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment