டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

SHARE

டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மழை பெய்தது.

அதன்பின் மைதானத்தில் எனவே ஈரப்பதத்தை உலரவைக்க எடுத்த முயற்சி பலன் அளிக்காததால் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கில்லீஸ் – திருப்பூர் தமிழன் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதன்படி பேட்டிங்கை துவக்கிய திருப்பூர் தமிழன்ஸ் 16.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால் நிறுத்தப்பட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் இந்தியா – பாகிஸ்தான்..அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

தோனிக்காக உயிரையும் கொடுக்கத் தயார்… ரசிகர்களை நெகிழ வைத்த கே.எல்.ராகுல்

Admin

அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: தோனி வழக்கு தள்ளிவைப்பு

Admin

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

கோபா அமெரிக்கா கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

Leave a Comment